பிரதான செய்திகள்

நாட்டில் மின்சார விநியோகத்தில் தடை மேற்கொள்ளப்படமாட்டாது.

தமிழ் சிங்கள புதுவருடத்தின் போது நாட்டில் மின்சார விநியோகத்தில் தடை மேற்கொள்ளப்படமாட்டாது என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டில் மழை வீழ்ச்சியின்மையால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக நாட்டில் தற்போது மின்சாரத்தின் தேவை 3700 அலகுகளில் இருந்து 3200 அலகுகளாக குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே நீடிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

மாகாண சபை தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் கரு

wpengine

சட்ட நடவடிக்கை எடுப்பதட்குள் மகிந்த வீட்டை விட்டு வெளியேறினால் சிறப்பு. கடிதம்தான் வேண்டுமெனில் அதுவும் அனுப்பிவைக்கப்படும்”

Maash

இனவாதிகளின் கையாட்களாக மாறிய ஐக்கிய மக்கள் சக்தி?மஹிந்த ராஜபக்ஷ

wpengine