பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

காஷ்மீரில் தொடர்ந்து பதட்டம்! 68 க்கும் மேற்பட்டவர்கள் பலி

wpengine

போர்ட் சிட்டியில் முதலீடு செய்வதற்காக கட்டார், ஓமான், இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

Editor

கொவிட் தடுப்பூசி வழங்கும் முறை தொடர்பில் தௌிவு படுத்தவில்லை சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

wpengine