பிரதான செய்திகள்

நஷீர் அஹமட் தடை நீக்கம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட், முப்படை தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் ஜயநாத் ஜயவீர குறிப்பிடுகையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் முப்படை தளங்களுக்குள் இனி பிரவேசிக்க முடியும்.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் முப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்போவதில்லை என்ற முடிவினையும்  திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

சம்பூர் மகா வித்தியாலயத்தில் வைத்து கடற்படை அதிகாரி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்ட காரணத்தால் பாதுகாப்பு அமைச்சு கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஷீர் அஹமட்டிற்கு இந்த தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச நியமனங்கள் கோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில்.

Maash

டெங்கு கட்டுப்பாட்டு வாரம்! வாழைச்சேனை பகுதியில் சிரமதானம் (படம்)

wpengine

பாலியல் சட்ட திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்ட ரணில்

wpengine