பிரதான செய்திகள்

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட சபைகள் போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டும்

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட சபைகள் போன்றவற்றை மறுசீரமைக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூடாவிட்டாலோ அல்லது வேறு தீர்வுகளை காண நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டாலோ, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்தின் வருமானம் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

தற்கொலைக்கு புதிய இயந்திரம்! சவப்பெட்டி கூட

wpengine

“யாழ் – புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் “தாயக நூலகத் திறப்பு விழா” குறித்த அறிவித்தல்!

wpengine

யூரியா உர மூடையின் விலை 7500 ரூபா குறைப்பு

wpengine