பிரதான செய்திகள்

தோட்ட தொழிலாளர் விடயத்தில் ரணிலின் நரித்தந்திரத்தை காணமுடியும்

நவீன் திசநாயக்கவை தோட்ட தொழிலாளர் சங்க தலைவராக நியமித்தமை ரணில் விக்ரமசிங்கவின் நரித்தந்திரமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஜனகன் குற்றம் சுமத்தியுள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


அவர் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில்,


தோட்ட தொழிலாளர் சங்க தலைவராக நவீன் திசநாயக்கவை நியமித்த விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சியை தனது வீடுபோல் வைத்திருக்கும் ரணில் தந்து நரித்தந்திரத்தை காண்பித்துள்ளார்.


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் போராடிக்கொண்டிருக்கும் போது நவீன் திசநாயக்க அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத போது அவரை தோட்ட தொழிலாளர்களுக்கு தலைவராக நியமித்துள்ளமை வெளியே பயிரை மேயும் கதையாகும் என்று கூறியுள்ளார்.

Related posts

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைப்பு

wpengine

கனடாவில் இருந்து வந்து, பைசிகில் ஓடிய பெண் பட்டாரக வாகனம் மோதி பலி..!

Maash

சுதந்திர நிகழ்வில் முஸ்லிம் தலைவர்களை ஞாபகமூட்டிய சப்ரி

wpengine