பிரதான செய்திகள்

தேர்தல் வட்டாரம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் கூட்டம்

வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட நெளுக்குளம் பிரிவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுமக்கள் கருத்தாடல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, நேற்றைய முன் தினம்(05) நெளுக்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உபசெயலாளரும், மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் இணைப்புச் செயலாளருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையிலும், ஏற்பாட்டிலும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், மாகாணசபை உறுப்பினரும், முன்னைநாள் சுகாதார அமைச்சருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

கலந்துரையாடலில் கிராமங்களின் முக்கிய பொதுப்பிரச்சினைகள், தேவைகள், புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை மற்றும் புதிய தேர்தல் முறைமை, சமகால அரசியல் நிலைமை, வட்டாரக் கிளைகளின் இருப்பின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

Related posts

கையடக்கத்தொலைபேசியை ஆராய்ந்த கணவனின் கைவிரல்கள் மனைவியால் துண்டிப்பு

wpengine

தமிழர்களின் உடன்பாடின்றி முஸ்லிம்களால் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமா?

wpengine

நெல்லையும்,அரிசியினை பதுக்கி வைப்போருக்கு அமைச்சர் அதிரடி நடவடிக்கை

wpengine