பிரதான செய்திகள்

தேர்தல் இல்லாட்டி இராஜினமா

தேர்தல் நடத்தப்படாவிட்டால் தமது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தாம் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையாளர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பதனை உறுதியாக குறிப்பிட முடியாது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தில் சில பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.
இந்தக் குறைபாடுகளை திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.
ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் என்னை திட்டுகின்றார்கள்.

தேர்தல் நடத்தப்படாமையினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளை பெரியபள்ளிவாசல் வழிநடத்த வேண்டும் -நவவி

wpengine

கல்கமுவ ஆற்றில் நீராட சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Maash

ராஜபஷ்ச அரசில் பொருளாதார சபையின் உறுப்பினராக ரணிலை நியமிக்க நடவடிக்கை

wpengine