பிரதான செய்திகள்

தேய்ந்த டயர்களை தேடுதல் வேட்டையினை நிறுத்திய அமைச்சர்

தேய்ந்த டயர்களை தேடுதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ₹ரம்புக்வெல தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதியன்று லுணுகலை-கொழும்பு பிரதான வீதியில் 30ஆம் கட்டையில் தனி​யார் பஸ்ஸொன்று சுமார் 250 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

அதில், 14 பேர் மரணமடைந்தனர், 35 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, தேய்ந்த டயர்களை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் முடுக்கிவிட்டிருந்தனர்.

டயர்கள் தேய்ந்திருந்தால் தண்டமும் அறவிடப்பட்டிருந்தது. எனினும், அச்செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்தார்

Related posts

தலைமன்னார் கடற்பரப்பில் ஆயிரத்து 57 கிலோ பீடி மற்றும் இலைகள்

wpengine

ஜனவரியில் உள்ளுராட்சி தேர்தல் ரணில்

wpengine

நாவலடி பிரதேசத்தில் கஞ்சா விற்பனை! ஒருவர் கைது

wpengine