தேசிய மாநாடு இடம்பெறும் பாலமுனை களத்தில் ஹக்கீம்

(மூத்த போராளி)

2016.03.19 ஆம் திகதி இடம்பெற இருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு தொடர்பாக மிக மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைகளை கண்காணிக்க இன்று காலை குறித்த மைதானத்திற்கு  அமைச்சர் ஹக்கீம் விஜயம் செய்தார்.

இதன் போது தேசிய தலைவருடன் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ், முன்னால் பிரதேச சபை தவிசாளர் அன்சில் மற்றும் முக்கியஸ்தர்களும், ஏராளமான போராளிகளும் சமூகமளித்திருந்தனர்.12049495_1590678977884643_3995259278842715751_n

மைதான ஒழுங்கமைப்பு, சுகாதார வசதிகள், நீர் விநியோகம், மேடை அலங்கரிப்பு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்களை ஏற்பாட்டாளர்களுக்கு இதன்போது தேசிய தலைவர் எடுத்துக் கூறினார்.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares