செய்திகள்பிரதான செய்திகள்

தேசபந்துவின் வீடு சுற்றிவளைப்பு – பல தடயம் கைப்பற்றல் .

பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி வந்த தேசபந்து தென்னகோன் அவர்களுக்கு சொந்தமான ஹோகந்தர வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் குறித்த வீடு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்றினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

வீட்டில் சந்தேகத்திற்கிடமான பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் அவரை இதுவரையில் கைது செய்ய முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையிலேயே வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டு சந்தேகத்திற்கிடமான பாரிய அளவிலான பொருட்களை அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் எடுத்து சென்றுள்ளனர். மேலும் தேசபந்து தென்னகோனுக்குச் சொந்தமான சொத்துக்களை பட்டியலிடுவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறித்து நாளை அவசர கூட்டம்

wpengine

50வருட காலமாக அபிவிருத்தி வடக்கு,கிழக்கு செல்லவில்லை

wpengine

தடை ஏற்பட்டால் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine