பிரதான செய்திகள்

திருகோணமலையில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்!

திருகோணமலை, குச்சவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர்கள் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் 18 வயது மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் ஜெயநகர் பகுதியில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Related posts

மன்னாரில் ஆட்டோ விபத்து

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வாக்குகளை பயன்படுத்த வேண்டும் ராவணா பலய அமைப்பு கடும் எச்சரிக்கை

wpengine

தேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுக்க புதிய அமைச்சர்கள் தேவை! பைஸர் முஸ்தபா

wpengine