பிரதான செய்திகள்

தாஜுதீனின் கொலை! நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு

மேல்மாகாணத்தின்  முன்னாள்  பொலிஸ் மா அதிபரும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான  அனுர சேனநாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும்  ஜுலை 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

வசீம் தாஜுதீனின் கொலை வழக்குத் தொடர்பில் இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியபோதே கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

வசீம் தாஜூதினின் கொலை வழக்கு தொடர்பாக   கடந்த திங்கட்கிழைமை (23) கைதுசெய்து   விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, கொழும்பு மேலதிக நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை – சட்டமா அதிபர்!

Editor

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு!

Editor

விரைவில் மலே­சி­யா­வுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ராக முஸம்மில்

wpengine