பிரதான செய்திகள்

தமிழர்களால் தாயகத்தில் நடாத்தவிருக்கும் எழுகதமிழ் நிகழ்வு

15/9/2019 இன்று நியூசிலாந்து ஆக்லாந்து  தமிழர்களால் தாயகத்தில் நடாத்தவிருக்கும் எழுகதமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து எழுற்சிப்போராட்டம் நடாத்தப்பட்டது.

ஆக்லாந்து நகரத்தின் மத்தியில் உள்ள
“Aotea Square,
Queen Street, “எனும் இடத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வில்
நூற்றுக்கு மேற்பட்ட தமிழீழ உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்

இந்நிகழ்வை திரு குருபரன் அவர்கள்
தொகுத்து வழங்கினார்,
தொடர்ந்து
நியூசிலாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் இணைப்பாளரும்,நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சருமான வைத்தியகலாநிதி. திரு .வசந்தன். அவர்கள் உரையாற்றினார்

அவர் தனதுரையில்.
தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை  அழித்து பத்தாண்டுகள் கடந்த நிலையிலும்
தன்னெழிற்சியோடு தமிழ் மக்கள் தங்களுக்கான விடுதலைக்கு போராடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

சொந்த மண்ணிலே அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்துகொண்டு போராடிக்கொண்டிருக்கும்  எமது உறவுகளுக்கான ஆதரவு தெரிவித்து
நாம் நடாத்தும் இப்படியான
போராட்டங்களின் ஊடாக
உலகெல்லாம் பரந்துவாழும் தமிழர்கள்
தங்களுக்கு இழைக்கப்படும் அநீகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து பதாகைகள் ஏந்தி நின்ற
இளையோர்களால் இப்போராட்டம்பற்றி வேற்றுநாட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டதுடன்
புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
15/09/2019.

Related posts

அபிவிருத்தி பணியையும் அரசியல் காற்புணர்ச்சிக்கு அப்பால் நின்று முன்னெடுக்க வேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine

மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை எல்லைப்பிரச்சினை விசாரணைக்கு

wpengine

மன்னார், மாந்தையில் பௌத்த விகாரை! சட்டவிரோத மீறல் சிவகரன்

wpengine