பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை பரிந்துரை செய்ய வேண்டாம்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞான சார தேரருக்கு பொதுமன்னிப்பை பரிந்துரை செய்ய வேண்டாம் என வலிறுத்தி மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சரை இன்று நேரில் சந்தித்த இந்த மனுவை கையளித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பொது மன்னிப்பளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது
இந்த நிலையில் ஜனாதிபதி பொதுமன்னிப்புக்காக ஞானசார தேரரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டாம் என சந்தியா எக்னெலிகொட தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் – அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில்

Maash

பொரலஸ்கமுவ பள்ளிவாசல் மீது தாக்குதல்

wpengine

ஞானசார தேரரை மறைத்து அரசாங்கம் மஹிந்த

wpengine