பிரதான செய்திகள்

ஞானசாரவுக்கு பாதுகாப்பு கொடுப்பது குற்றம்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பர் மற்றும் அந்நடவடிக்கைக்கு பாதுகாப்பு வழங்குபவர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்பிலான தகவல் தெரிந்தால் பொலிஸ் தலைமைக் காரியாலயத்திற்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி பொதுமக்களை வேண்டிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார்.

wpengine

கடந்த காலங்களில் வடக்கில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம், தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.

Maash

புதிதாக மூன்று அமைச்சர்கள் நியமனம்

wpengine