செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஜப்பான் அரசாங்கம் மற்றும் (UNFPA ) ஆகியன இணைந்து வடக்கு சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.

ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA ) ஆகியன இணைந்து வடக்கு மாகாணத்தில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.

சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டமானது,  யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமடா, கடந்த 12 ஆம் திகதி வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்காவற்துறை வைத்தியசாலையில் வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கு 34,089,250 ரூபா நிதியுதவியின் கீழ் பல்வேறு சுகாதார வசதிகளை வழங்கினார். 

இந்த சுகாதார வசதிகள் மன்னார் வான்கலை பிரதேச வைத்தியசாலை , மன்னார் நானாட்டன் பிரதேச வைத்தியசாலை , மன்னார் விடத்தல்தீவு பிரதேச வைத்தியசாலை , யாழ்ப்பாணம் மருதங்கேணி வைத்தியசாலை,  யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை வைத்தியசாலை , யாழ்ப்பாணம் சங்கானை வைத்தியசாலை ,  கிளிநொச்சி அனனிவிழுந்தான் கிராஞ்சி மற்றும் பரந்தநறு ஆகிய கிராமங்களில் வழங்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஆரோக்கியமான கர்ப்பங்கள் மற்றும் பாதுகாப்பான பிரசவங்களை உறுதி செய்ய முடியும். 

Related posts

தலைமன்னார் ஆலய சொத்தை கொள்ளையிட முயற்சி! சிலர் மௌனம்

wpengine

வரலாறு பேசுகின்ற ஒரு கட்சியின் தலைமையாக அமைச்சர் றிசாத் மாறியுள்ளார்.

wpengine

உயர்கல்விக்காக கனடா சென்ற இலங்கை மாணவன் விபத்தில் பலி!

Editor