பிரதான செய்திகள்

சு.க அமைப்பாளர் பதவிகளிலிருந்து கீதா, சாலிந்த நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவினால் நீக்கப்பட்டுள்ளனர்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், பெந்தர – எல்பிட்டிய தேர்தல் தொகுதியின்  அமைப்பாளராகவிருந்த கீதா குமாரசிங்க, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, முன்னாள் பிரதேச சபைத் தலைவர் கயான் சிறிமன்ன பெந்தர தொகுதியின் அமைப்பாளராகவும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அமில ஹர்ஷன காரியவசம் எல்பிட்டிய தொகுதியின் அமைப்பாளராகவும் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதில்லை தொழிற்சங்கம் கண்டனம்

wpengine

எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Maash

முஸ்லிம் மக்களுக்கு எதிராக களங்கத்தை ஏற்படுத்தும் குழுக்களை அடையாளம் கண்டுள்ளோம்.

wpengine