பிரதான செய்திகள்

சிலாவத்துறை கமநல சேவை நிலையத்தில் கையாடல்! பிரதேசத்தின் சொத்து எங்கே?

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான உழவு இயந்திரத்தின் ஆறு டயர்கள் கையாடல் (களவு) செய்யபட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் வதிவிட பயிற்சி நெறிக்கு சென்ற வேலையில் இப்படியான கையாடல் (களவு) இடம்பெற்று இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இந்ந நிலையத்தின் பொறுப்பு  அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் அதிகாரி ஈரணை இளுப்பைக்குளம் கமநல சேவை நிலையத்தில் சுமார் 2லச்சம் ரூபா மக்கள் பணங்களை கையாடல் செய்தவர் என்றும் அறிய முடிகின்றது.

அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துகளை கையாடல் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

மன்னார் கொரோனா நோயாளி ஆயர் இல்லத்தை சேர்ந்தவர்! உண்மையினை மூடி மறைக்கும் அரச உயரதிகாரிகள்

wpengine

புகையிரதத்தில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதி பிணையில் விடுதலை இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை!

Editor

அமைச்சர் றிஷாடிற்கு எதிரான பிரச்சினை! முஸ்லிம் சமூக பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

wpengine