உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று (15) கலைக்கப்பட்டது..!

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தல், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள 14 ஆவது பொதுத் தேர்தல் ஆகும்.

இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம் முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

7 பில்லியன் நுகர்வோர் அமெரிக்க பொருட்களை வாங்குவதை நிறுத்தினால், அமெரிக்க பொருளாதாரம் சுவருக்குள் சரிந்துவிடும்.

Maash

நான்கு குழந்தையின் தாய் கிசுகிசுக்கள் கணவருக்கு விவாகரத்து கடிதம்

wpengine

கலிபோர்னியாவில் பதாவை நீக்கிய பொலிஸ்! பெண்ணுக்கு இழப்பீடு

wpengine