பிரதான செய்திகள்

சாலியை கைது செய்ய வேண்டும்! புர்காவுக்கு எதிரான அமைச்சர்

தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலியை கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர, அசாத் சாலி மத அடிப்படைவாதக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அசாத் சாலியை நிச்சியமாகக் கைது செய்ய வேண்டும். அவர் மத அடிப்படைவாதக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மத அடிப்படைவாதமே பின்னர் பயங்கரவாதமாக உருவாகிறது. ஷரீயா சட்டத்தின் செயற்பட வேண்டுமென்றால் அவர் சவுதி அரேபியாவுக்கே செல்ல வேண்டும். இலங்கையில் இருக்க வேண்டுமென்றால், இலங்கையின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டே வாழ வேண்டும். 

இலங்கையிலிருந்துக் கொண்டு ஷரீயா பற்றி பேச முடியாது. எனவே அவரைக் கைது செய்து, அவருக்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அசாத் சாலி தொடர்பில் சிஐடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Related posts

பூர்வீக குடிகளான தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை

wpengine

சதொசயில் இலாபமீட்டும் நோக்கத்தை விட மக்களின் விமோசனமே எங்களின் தாரக மந்திரமாகும் அமைச்சர் றிஷாட்

wpengine

இன்று மாலை 6மணியில் இருந்து திங்கள் காலை 6மணி வரை ஊடரங்கு சட்டம்

wpengine