பிரதான செய்திகள்

சஹ்ரானுடன் தொடர்பு! புத்தளம் மத்ராஸாவில் இருவர் கைது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் புத்தளத்தில்  உரையாற்றியதாக கூறப்படும் மதராஸா பாடசாலையில் பணியாற்றிய இருவர் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் இந்த மதராஸா பாடசாலைக்குச் சென்று அங்கிருந்த மாணவர்களிடையே உரையாற்றியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே, 
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

26,27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

இரண்டு நாட்களுக்குள் உடுவே விசாரிக்கப்படவுள்ளார்!

wpengine

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ்! அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

கடனை திருப்பிச் செலுத்தாத ஹொரவ்பொத்தானை வேட்பாளர் கைது .

Maash