பிரதான செய்திகள்

சவூதி நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றில் இருந்து ஹிஸ்புல்லாஹ்வுக்கு நிதி உதவி

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமானதாக கருதப்படும் மட்டக்களப்பு பல்கலைகழகத்தின் நிர்மானதிற்காக சவூதி நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றில் இருந்து 5ஆயிரத்து நூற்று எழுபத்தைந்து மில்லியன் ரூபாய் கடனாக இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டது.

தொடர்பில் உரிய விசாரனைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் லங்க ஜயரத்ன குற்றவியல் விசாரனை பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

இலக்கம் 10 /18 என்று முகவரியில் நடத்தப்பட்டு வரும் ஹீறா அறக்கட்டளை அமைப்பு மற்றும் மட்டகளப்பு தனியார் பல்கலைழைகத்திற்காக மேற்குறிப்பிடப்பட்டுள்ள.

அமைப்பினால் வழங்கப்பட்ட கடன் தொகை உண்மையில் பல்கலைகழகம் அமைக்க பயன்ப்படுத்தப்பட்டதா இல்லை பயங்கரவாதத்திற்கு பயன்ப்படுத்தப்பட்டதா என்பது குறித்த முழுமையான விசாரனைகளை மேற்கொள்ளுமாறு குற்றவியல் விசாரனை பிரிவிற்கு நீதவான் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹக்கீம் மடையனாகி விட்டோம்.படுகுழியில் விழுந்து விட்டோம் என கூறுவது வழமையானதொன்று.

wpengine

எச்சரிக்கை!!!! தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரிப்பு.

Maash

சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டம்! முசலி பிரதேசம் பாதிப்பு! மக்கள் விசனம்

wpengine