பிரதான செய்திகள்

சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் மண்ணை தோண்டும் விஷேட பிரிவு

வவுனியா – பாரதிபுரத்தில் வீட்டுக்காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அங்கு தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று நேேேற்று  காலை பத்து மணியளவில் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், குறித்த வீட்டு காணியிலிருந்து எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தோண்டும் பணி நடைபெற்ற போது அப்பகுதியைச் சுற்றி
விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, கிராம சேவையாளர் முன்னிலையில் வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வாளர்கள் ஆகியோரால் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் தோண்டப்பட்ட பகுதியில் தகர கொள்கலன் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் தோண்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா சைவப்பிரகாசா ஆரம்ப பாடசாலைக்கு வாத்திய இசைக்கருவிகளை வழங்கிய மஸ்தான் (பா.உ)

wpengine

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முன்னால் மாகாண சபை உறுப்பினர்! நிதியும் ஒதுக்கீடு

wpengine

முசலி பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான கருத்தரங்கு

wpengine