பிரதான செய்திகள்

கொவிட் 19 சில குழுக்கள் மோசடியில் வணிகர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

கொவிட் – 19 தொற்றை காரணம் காட்டி வணிக நடவடிக்கைகளின் போது சில குழுக்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.


அநுராதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


அத்தியாவசிய மற்றும் பிற நுகர்வோர் பொருட்களின் விலைகள் இப்போது நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளன.


தொற்றுநோயை சாதகமாக கருதி வணிகத்துறையில் பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மோசடியில் ஈடுபட்ட வணிகர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related posts

காதலர் தினத்தை முன்னிட்டு சிக்கலை சந்திக்கும் பெண்களுக்கு , 109 தொலைபேசி எண்.

Maash

மன்னார் நகர சபை ஊழியரின் அசமந்தபோக்கு! இரானுவ சாவடி சேதம்

wpengine

பொருளாதார நிலையம் தொடர்பில் கூட்டமைப்பு சந்திப்பு

wpengine