பிரதான செய்திகள்

கொரோனா தாக்கம் தேர்தல் ஒத்திவைக்க முடியும்

எதிர்வரும் மாதம் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.


எதிர்பார்த்ததனை போன்று ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு குறித்த திகதியில் தேர்தல் நடத்தப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமைய தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் மார்ச் மாதம் 26ஆம் திகதி தீர்மானிக்கப்படும்.


ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு பின்னர் வேலை செய்யும் 14 நாட்களின் பின்னர் ஒரு நாள் தேர்தல் நடத்தப்படும் நாளாக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

Related posts

அரசு சரியான மருத்துவ உபகரணங்களை வழங்காமையேபேராதனை யுவதியின் மரணத்திற்கு காரணம்! -தாதியர் சங்க பொதுச் செயலாளர்-

Editor

புலமை பரீட்டை பெறுபேறுகள் நாளை எதிர்பாருங்கள்

wpengine

தாஜூதீன் கொலைக்கு இளங்ககோனும் பொறுப்புக் கூற வேண்டும்

wpengine