பிரதான செய்திகள்

கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்கள் நியமனம்

திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரிகள் இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து கடமைகளை பொறுப்பேற்பதற்காக கையொப்பமிட்டுள்ளனர்.


குறித்த பட்டதாரிகள் அனைவரும் நாளை முதல் கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தெரிவித்தார்.


கிண்ணியா பொது சுகாதார பணிமனையின் கீழ் குறித்த பயிலுனர் பட்டதாரிகள் நியமிக்கவுள்ளார்கள்.
இவர்களுக்கான கடமை தொடர்பான விடயங்களை பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.


குறித்த நிகழ்வில் கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி போன்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

விசேட இராப்போசன விருந்து! சம்பந்தன்,விக்னேஸ்வரன் பங்கேற்பு முஸ்லிம் தலைவர்கள் எங்கே?

wpengine

லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

Editor

உருகுவே இராச்சியத்தை தாக்கிய சூறாவளி (படம்)

wpengine