பிரதான செய்திகள்

கொரோனா – ஜனாஸாக்களை மன்னார்-முசலியில் நல்லடக்கம் செய்ய காணி தயார் !

( ஏ.எச்.எம்.பூமுதீன் )

கொரோனாவால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய ஒரு ஏக்கர் காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் – முசலி பிரதேசத்தில் உள்ள , வேப்பங்குளத்திலேயே – குறித்த காணி உள்ளது.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் – சிலாபத்துறை டவுன் மஸ்ஜிதில் முசலி பிரதேச அனைத்து மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று 10 ஆம் திகதி நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் முசலிப் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் – முசலி உலமாக்கள் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது – கொரோனா – ஜனாஸா நல்லடக்கத்திற்காக – வேப்பங்குளத்தை சேர்ந்த ஒருவர் , தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை அன்பளிப்பு செய்வதாக (வக்பு ) அறிவித்துள்ளார்.

Related posts

ஸாஜில் மீடியாவின் ‘ஈதுன் ஸயீத்’ மாபெரும் பெருநாள் நிகழ்ச்சி

wpengine

கோட்டாபய ராஜபக்ச கைது, கம்மன்பில யூகம், உயிர்த்த ஞாயிறு தொடர்பிலும் அவர் முன்னரே அறிந்திருக்கின்றார்.

Maash

பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். – டில்வின்

Maash