பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொரோனா அதிகரிப்பு! கோத்தாவின் வவுனியா விஜயம் ரத்து

எதிர்வரும் 11ம் திகதி வவுனியாவுக்கு வியம் செய்ய இருந்த சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் விஜயம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாகவே அவரின் இந்த விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகம் கடந்த முதலாம் திகதி முதல் பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்அதன் ஆரம்பவிழாவை எதிர்வரும் 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் தலைமையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும் கொரோனா பரவல் காரணமாக அரச நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால், குறித்த நிகழ்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கைக்கு அனுமதி

wpengine

பிரான்சில் இருந்து இந்தியா சென்று கடல் மூலம் இலங்கை செல்ல முயன்ற இரு புலம்பெயர் தமிழர் கைது .

Maash

தகாத வார்த்தைகளால் மோதிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine