பிரதான செய்திகள்

கே.ஏ.பாயிஸ் (52) உயிரிழந்தமை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது

புத்தளம் நகர சபையின் தலைவர்  ​கே.ஏ.பாயிஸ் (52) உயிரிழந்தமை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

புத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தொன்றில் நேற்று (23) மரணமடைந்த நிலையில், அவரது சாரதி உள்ளிட்ட மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், வனாத்தவில்லு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள்  மதுபோதையில் இருந்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

அவருடைய ஜனாஸா, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் புத்தளம் மற்றும் வனாத்தவில்லு  பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்புக்கான திகதியில் மாற்றம்

Maash

மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை – ஹசன் அலி

wpengine

புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் சிறப்பு ரயில் சேவை..!

Maash