பிரதான செய்திகள்

கே.ஏ.பாயிஸ் (52) உயிரிழந்தமை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது

புத்தளம் நகர சபையின் தலைவர்  ​கே.ஏ.பாயிஸ் (52) உயிரிழந்தமை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

புத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தொன்றில் நேற்று (23) மரணமடைந்த நிலையில், அவரது சாரதி உள்ளிட்ட மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், வனாத்தவில்லு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள்  மதுபோதையில் இருந்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

அவருடைய ஜனாஸா, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் புத்தளம் மற்றும் வனாத்தவில்லு  பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க ரவூப் ஹக்கீமை நாங்கள் ஆதரிக்கின்றோம்.

wpengine

தமிழ் மக்கள் இன்று சுதந்திரமாக வடக்கில் வாழ்கின்றார்கள் மஹிந்த

wpengine

யாழ் விஜயம் ஊடக அமைச்சருடன் ஊடக குழு ஒர் நோக்கு

wpengine