பிரதான செய்திகள்

கிளிநொச்சி செல்வா நகரில் அரைக்கும் ஆலை திறந்து வைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்

(ஊடக பிரிவு)
கிளிநொச்சி மாவட்ட செல்வாநகர் கிராமத்துக்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சால் 2015 ஆம் ஆண்டு மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து 2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் செல்வாநகர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அமைக்கப்பட்ட  அரைக்கும் ஆலையை  நேற்று 27-04-2016 புதன் மாலை 4.30 மணியளவில் திறந்துவைத்தார் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

நிகழ்விற்கு வடக்கு மாகாணசபையின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தவநாதன், அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன், மற்றும் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   35f70473-b42a-4b7c-8fe1-21f316d3c9992191ac50-85d6-4506-bd6a-bf369bd5aaaa

Related posts

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான T20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!

Editor

பாலைக்குழி விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த முன்னால் அமைச்சர்

wpengine

ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த பிக்குகளின் பலத்தை நிரூபித்து இருக்கின்றோம்.

wpengine