பிரதான செய்திகள்

கிராம சேவகர் அரசியல் பழிவாங்கல்! மக்கள் ஆர்ப்பாட்டம்

புன்னாலைக் கட்டுவன் வடக்கு ஜே/208 கிராம சேவகர் அரசியல் பழிவாங்குதலுக்காக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புன்னாலைக் கட்டுவன் வடக்கு மீள் குடியேற்ற பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் வீட்டுத்திட்டங்கள் உட்பட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் மக்களுக்கான தேவைகளை அறிந்து மிக நேர்த்தியாக கடமை செய்துகொண்டிருந்த கிராம சேவகரை அரசியல் உள்நோக்கத்துக்காக இடமாற்றம் செய்துள்ளனர்.

எனவே குறுகிய நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை இரத்துச் செய்து எமக்கு அதே கிராம சேவகரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related posts

தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகள் இரவு வேளைகளில் திடீரென சில வீடுகளுக்குள் சென்றனர்.

wpengine

இதயபூர்வமான நன்றிகள்! கோட்டாபய ராஐபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த றிஷாட்

wpengine

ஹிருனிக்காவுக்கு பயந்து! ஜனாதிபதியின் சோதிடருக்கு விஷேட பாதுகாப்பு

wpengine