செய்திகள்பிரதான செய்திகள்

காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த இந்தியர் கைது .

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகபட்டினத்தில் இருந்து வருகை தந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் 4 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருளை சூட்சுமமாக உடமையில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.

சோதனையில் சுங்க அதிகாரிகள் அதனைக் கண்டுபிடித்துக் கைப்பற்றினர்.

போதைப்பொருளைக் கடத்தி வந்தவரைக் கைது செய்த சுங்கத் திணைக்களத்தினர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவரைக் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

Related posts

அஸ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்ப்புச் செய்த சிறுகதை நூலான “பட்டாம்பூச்சிக் கனவுகள்” வெளியீடு.

wpengine

திருகோணமலையில் சட்டவிரோத மண் அகழ்வு! ஆளுனர் நடவடிக்கை

wpengine

அமைச்சரவையில் கட்டாயம் மாற்றம் செய்யப்படும்-ஜனாதிபதி

wpengine