பிரதான செய்திகள்

கல்பிட்டியில் தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் மாபெரும் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’

உலகை படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே வணங்குவதற்கு தகுதியாவன் என்ற ஏகத்துவத்தை நிலைநாட்டவும் அவனல்லாத எவருக்கும் எப்பொருளுக்கும் அவனது ஆற்றல்கள், சக்திகள் மற்றும் பன்புகள் இல்லை என்பதை நிலைநாட்டி ‘ஷிர்க்’ எனும் இணைவைப்பை அடியோடு அழிக்கவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தளம் மாவட்டம் சார்பாக மாபெரும் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ இன்ஷாஅல்லாஹ்! எதிர் வரும் மே 01ம் திகதி கல்பிட்டியில் நடைபெறவுள்ளது.

இடம்: கல்பிட்டி செலான் வங்கிக்கு பின்னால்
நேரம்: மாலை 4:00 மணி – இரவு 10:00

விசேட உரைகள்

“தகர்க்கப்படவேண்டிய தர்கா வழிபாடு”
மவ்லவி. M.H.M. ரஸான் DISc (ஸ்ரீ.ல.த.ஜ. பேச்சாளர்)

“மூடநம்பிக்கைகளும் இன்றைய முஸ்லிம்களும்”
மவ்லவி. F.M. ரஸ்மின் MISc (ஸ்ரீ.ல.த.ஜ. துனை செயலாளர்)

“மறுமை வெற்றிக்கு கை கொடுக்கும் தவ்ஹீத்”
மவ்லவி. M.T.M.பர்ஸான் (ஸ்ரீ.ல.த.ஜ. துனை தலைவர்)

மூடநம்பிக்கையை தகர்த்து ஏகத்துவத்தை உணர்த்தும் சிறப்பு பட்டி மன்றம்

“மூடநம்பிக்கை பெருகக் காரணம் ஆலிம்களா? பொது மக்களா?”

குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட உங்களை அன்புடன் அழைக்கிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புத்தளம் மாவட்டம்

தொடர்புகளுக்கு: 0772960926, 0777782699, 0718256262

Related posts

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா உளவியல் ரீதியாக அதிர்ச்சி

wpengine

2023 பாடசாலைகளில் 1ம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Editor

லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமான , சட்டமா அதிபர் குற்றச்சாட்டுக்களில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

Maash