பிரதான செய்திகள்

கருணாவின் பிறந்த நாள்! பால்சோறு வினியோகம்

முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் 51வது பிறந்த தினம் நேற்று  கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் ஆதரவாளர்களால் பாற்சோறு வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கிரான் பிள்ளையார் கோவில் முன்பாக இடம்பெற்றது.
இதில், கட்சி உறுப்பினர்களான எஸ்.உதயகுமார், துரைசிங்கம், மித்திரன், கண்ணன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது பாதசாரிகள், பொதுமக்கள் எனப் பலருக்கும் பாற்சோறு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

றிஷாட்டை விடுதலை செய்யக்கோரி மு.கா உறுப்பினர் கையொப்பம்

wpengine

மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் விளையாட்டு பிரச்சினை! வன்னிக்கு விளையாட்டு மைதானம் விரைவில் நாமல்

wpengine

சிலரின் வெறுக்கத்தக்க கருத்துக்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மகாசங்கத்தினர்

wpengine