பிரதான செய்திகள்

கம நெகும நிதி மோசடி! பசில் விசாரணை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணை இடம்பெறுமென ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ இன்று (17) ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆஜராகியிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியதோடு, கம நெகும திட்டத்தின் 155 மல்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பான விசாரணையே எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts

Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்.!

Maash

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசனமானது..!

Maash

வவுனியா Food City மதுபான விற்பனையில் முதலிடம்

wpengine