பிரதான செய்திகள்

கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்.

பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), 

நூல்: புகாரி 6539

அந்த வகையில் வருகின்ற புனித ரமழானை ( நேன்பை ) முன்னிட்டு கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த தெரிவு செய்யப்பட்ட வறிய நிலையில் வாழும் சுமார் 50 குடும்பங்களுக்கு 10 kg உடைய அரிசி வழங்கி உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே அல்லாஹ் உங்களுக்கு வழங்கி இருக்கின்ற செல்வத்தில் இருந்து வேறு எதுவித மறு பலனும் எதிர்பாராது நண்மையை மாத்திரம் எதிர்பார்த்து இவர்களுக்கு உதவ முடிந்தால் உடன் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் .

 

அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 

நூல்: புகாரி 1410

Related posts

எம்.ஏ. சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

wpengine

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அதிபர் ஒருவருக்கு எதிரான முறைப்பாடு

wpengine

இந்தியா கடற்படையினால் மீட்கப்பட்ட மன்னார் மீனவர்

wpengine