பிரதான செய்திகள்

ஐல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாரில் பேரணி.

(பிராந்திய செய்தியாளர் )

கடந்த ஓரிரு தினங்களாக தமிழகம் மற்றும் உலகின் அனைத்து தமிழர்கள் வாழும் இடங்களிலும் இதேபோன்று இலங்கையின் பல பாகங்களிலும் ஐல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கி பெரும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தமிழர் பாரம்பரியத்துக்காக இனம் மதம் நாடு அனைத்தையும் தாண்டி தமிழர் என்ற ஒற்றுமையோடு குரல் எழுப்பப்படும் இவ்வேளையில் மன்னார் மாவட்டத்திலும் மன்னார் நகரை அண்டிய இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கி பேரணி ஒன்று நேற்று சனிக்கிழமை (21.01.2017) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நாற் சந்தியில் இடம்பெற்றது.

இதில் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.இவ்போராட்டத்தின்போது இவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் ‘தமிழனின் வீர விளையாட்டை தடைசெய்யாதே, தமிழ் பண்பாட்டை அழிக்காதே’, ‘தமிழர் உரிமையை தடுக்காதே’, ‘சல்லிக்கட்டு எங்கள் மரபுரிமை அதை தடை செய்ய பீட்டாவுக்கு ஏது உரிமை’ என்ற வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தது.

Related posts

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆட்சேபம்

wpengine

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில் இல்லை

wpengine

கழுதைக்கு கரட் காட்டுவது போல! அட்டாளைச்சேனைக்கு ஹக்கீமின் தேசிய பட்டியல்

wpengine