பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியுடன் றிஷாட்,ஹக்கீம் இணைந்து போட்டி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக மேல்மாகாணசபை உறுப்பினர் மொகமட் பாயிஸ் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு றிசாட் பதியுதீன் மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான கட்சிகள் இணைந்து போட்டியிட உத்தேசித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொலன்னாவ, கொழும்பு மற்றும் தெகிவளை போன்ற இடங்களில் வேட்பாளர்களை முன்னிறுத்த சம்மதம் தெரிவித்தார்களானால் நாங்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை; உடனடியாக தகவல் தருமாறும் வேண்டுகோள்!

Editor

சுவரொட்டிக்கும் சிவசேனாவுக்கும் தொடர் இல்லை! தலைவர்

wpengine

அரசாங்க ஊழியர்களுக்கு தகவல்! 22 வீதத்தால் சம்பளம் அதிகரிப்பு!

wpengine