பிரதான செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பாரிய தோல்வியினை கண்ட ஐ.தே.க

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளை பெற்று முதலாவது இடத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 10,113 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5,273 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 3 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

Related posts

சதொச நிறுவனத்தின் தலைவர் கைது

wpengine

ஒவ்வெரு வீடாக சென்று மரங்களை வளர்க்க வேண்டும்! இளைஞர் பேரவையில் அமைச்சர் ஹக்கீம்

wpengine

வை.எல்.எஸ். ஹமீட்டின் வெள்ளவத்தை பங்களா! பணம் எங்கிருந்து வந்தது?

wpengine