உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

எகிப்து மசூதியில் துப்பாக்கி சூடு! 230பேர் பலி

எகிப்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 230 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு சினாய் மாகாணத்தின் அல் ஆரிஷ் அருகே உள்ள பில் அல்-அபெட் நகரின் அல் ரவுடா மசூதியிலேயே இக்கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த வேளையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலில் 230 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

சியான் பகுதியில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் இதுவே பாரிய தாக்குதலாக கருதப்படுகிறது.
எனினும் இத்தாக்குதலுக்கு காரணமான நபர்கள் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை.

 

Related posts

கொழும்பில் மழை நீரை கட்டுப்படுத்துவதற்கு புதிய சுரங்க வழி ஓடைகளை அமைக்க தீர்மானம்

wpengine

மனிதர்களை பழிவாங்கும் அரசாங்கம் மஹிந்த

wpengine

இந்தோனேசியாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine