பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

எகிப்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 32 பேர் பலி!

மத்திய எகிப்தின், சொஹாக் மாகாணத்தின், தஹ்டா நகருக்கு அருகில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 32 பேர் பலியாகியுள்ளதுடன், 165 பேர் காயமடைந்துள்ளனர். 

அடையாளம் தெரியாத நபர்களால், ரயிலின் அவசர தடுப்புக் கட்டை இயக்கப்பட்டமையால் குறித்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது, குறித்த ரயிலுக்கு பின்னால் பயணித்த ரயில், அதனுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்து சம்பவத்துக்கு பொறுப்பானவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்குவதாக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டாஹ் அல்-சிசி (Abdul Fattah al-Sisi) தெரிவித்துள்ளார்.

Related posts

வங்குரோத்து வாதிகள் என் மீது பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றார்கள்

wpengine

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்! தமிழ் மக்கள் பேரவை

wpengine

வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு தனராஜின் நிலைமை!

wpengine