பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சாவகச்சேரியில் சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்றவர் கைது ..!

உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட 18 மாடுகளை நேற்று (24) இரவு சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டிருப்பதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மாடுகளை ஏற்றி வந்த லொறியை சாவகச்சேரி நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டபோதே குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அபுதாபி விஜயம்

wpengine

கூட்டுறவுச் சங்கங்கள் பலவற்றில் பெரியளவிலான ஊழல் மோசடிகள்

wpengine

இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல

wpengine