பிரதான செய்திகள்

உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

மாகாண ஆளுனர்களை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

இன்றைய தினத்திற்குள் மாகாண ஆளுனர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஆளுனர்களில் சில மாற்றங்களைச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார் என சில மாகாண ஆளுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் பதவியை ராஜினாமா செய்யுமாறு தமக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

Related posts

தாஜுதீன் படுகொலை : என்னை தாக்க முற்பட்டவர்களை விசாரணை நடத்துக

wpengine

வெள்ளம்பிடிய இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளி மீது முகமூடி அணிந்தவர்கள் தாக்குதல் (படம்)

wpengine

வட மாகாணத்தில் இன்று மின்தடை

wpengine