உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உக்ரைன் யுத்தம்! பங்களாதேஷ்சில் எரிபொருள் விலை 50% உயர்

எரிபொருளின் விலையை சுமார் 50% ஆல் உயர்த்த பங்களாதேஷ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

உக்ரைனில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோலின் விலையை 130 டாக்கா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு டாக்கா சுமார் 3.80 இலங்கை ரூபாய்களாகும்.

வங்கதேசம் தற்போது அந்நிய செலாவணி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், கையிருப்பும் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது

Related posts

அளுத்கம தீக்கிரை சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்யுங்கள் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள்.

wpengine

வெள்ளப்பெருக்கு கொடுப்பனவு மேலும் மூன்று மாதம்

wpengine

பேஸ்புக் எனது உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வது போல உணர்ந்தேன்-விஜய் சேதுபதி

wpengine