செய்திகள்பிரதான செய்திகள்

இஷாதி அமந்தா, இன்று (04) நாடு திரும்பினார்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40ஆவது திருமதி உலக அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இன்று நாடு திரும்பியுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவரை வரவேற்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் விசேட முனையத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில், திருமதி உலக அழகி போட்டியின் இலங்கைக்கான பணிப்பாளர் சந்திமல் ஜயசிங்க மற்றும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ருக்மல் சேநானாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற திருமதி உலக அழகி போட்டியில் தென் ஆபிரிக்கா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் மனித புதைகுழி மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது

wpengine

ஆயுத கலாச்சாரம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

wpengine

யாழில் தொற்று இல்லாதவர்களின் கடைகளைத் திறக்க அனுமதி!

Editor