பிரதான செய்திகள்

இலவசக்கல்வியின் தரம் குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது இஷாக் பா.உ

அஸீம் கிலாப்தீன்   

இலங்கையில் வாழும் 6 வயதை தாண்டிய அனைத்து மாணவர்களுக்கும் இலவசக்கல்வியை கற்கும் உரிமை உண்டு. அனுராதபுர மாவட்டத்தில் இவ்விலவசக்கல்வியின் தரமானது குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட்டு சரியான தரத்தில் அனுராதபுர மாவட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.

அனுராதபுரம் களுக்கல பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள அ/களுக்கல வித்தியாலயத்தில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதை தெரிவித்தார்.

அத்தோடு அப்பாடசாலையின் குறை நிறைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறும் அன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நீர்ப்பாசன துறை அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஸா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Related posts

20க்கு ஆதரவு! முன்னால் அமைச்சர்களான றிஷாட்,ஹக்கீம்,திகாம்பரம்

wpengine

வவுனியாவில் பரீட்டை எழுதும் மாணவிக்கு இலக்கம் கொடுத்த ஆசிரியர்

wpengine

அரசாங்கம் பதவியை பாரமெடுத்ததன் பின்னர் 70க்கு மெல் மனிதப் படுகொலைகள்..! ஹக்கீம் எம் . பி .

Maash