இலங்கை WhatApp பாவனையாளருக்கு வந்த சோதனை

Whatsapp சமூக வலைத்தள பயன்பாட்டின் தனியுரிமை கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத பயனார்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனாளர்கள் எதிர்வரும் வாரங்களில் தங்கள் கணக்குகளை இழக்க நேரிடும் என்று Whatsapp அறிவித்துள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் Whatsapp நிறுவனம் தமது நிபந்தனைகளை பயனாளர்களுக்கு முன்வைத்திருந்து. அந்த நிபந்தனைகளுக்கு இணங்காத இலங்கை பயனாளர்களின் கணக்குகளில் சில தடைகளை விதிப்பதற்கு எதிர்வரும் வாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என Whatsapp நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகில் 5 பில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்கள்Whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

Whatsapp நிறுவனத்தின் கொள்கைகளை ஏற்காதவர்கள் தங்கள் கணக்குகளுக்கு நுழைய முடியாத நிலைமை மற்றும் அழைப்புகளை ஏற்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் ஒரு சில நாட்களின் பின்னர் கணக்கு முழுமையாக செயலிழந்து விடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares