பிரதான செய்திகள்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு நான்கு நாடுகள் சம்மதம்-அமைச்சர் அலி சப்ரி

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு மேலும் நான்கு நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இதனை அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி, குவைத் ஆகிய நாடுகள் இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி உத்தரவாதம் வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி இது குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்கிய இந்தியா, பாரிஸ் கிளப் அங்கத்துவ நாடுகள் மற்றும் சீனாவுக்கு மீண்டும் ஒருமுறை அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

Related posts

வரவு – செலவு திட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறும்போது, வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் .

Maash

புலிகளின் சிந்தனையில் வாழும் சில அரசியல்வாதிகள்! வடக்கு முஸ்லிம்கள் அச்சத்தில்

wpengine

தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றிய அசார்தீன்

wpengine