பிரதான செய்திகள்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு நான்கு நாடுகள் சம்மதம்-அமைச்சர் அலி சப்ரி

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு மேலும் நான்கு நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இதனை அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி, குவைத் ஆகிய நாடுகள் இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி உத்தரவாதம் வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி இது குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்கிய இந்தியா, பாரிஸ் கிளப் அங்கத்துவ நாடுகள் மற்றும் சீனாவுக்கு மீண்டும் ஒருமுறை அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

Related posts

Amazon நிறுவனம் இலங்கை தேசிய கொடிக்கு எதிரான விளம்பரம்

wpengine

இலங்கையில் தங்கத்தின் விலை தொடராக அதிகரிப்பு

wpengine

மன்னாரில் நலன்புரி நன்மைளை பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசாங்க அதிபர்!

Editor