பிரதான செய்திகள்

இரட்டைக்கொலைக்கு ஏறாவூர் பள்ளிவாசல் ஆர்ப்பாட்டம்

ஏறாவூர், சவுக்கடி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு எதிராக ஏறாவூர் பள்ளிவாசல் சம்மேளனம் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

ஜாமியுல் அக்பர் ஜூம் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும் ஆ தொழுகையின் பின்னர் ஒன்றுகூடிய சம்மேளன பிரதிநிதிகளும், பொதுமக்களும் இணைந்து ஏறாவூர் பிரதான வீதிவரைக்கும் பேரணியாக சென்று அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது தாயும், மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் , இரட்டைக் கொலையின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்பிடம் வேண்டுகோள் விடுப்பதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் துண்டுப்பிரசுரம் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தது.

Related posts

இன்று ஒரே நாளில் மொத்தம் 32 இந்திய மீனவர்களும், 5 படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Maash

ரணில் பொருளாதார வல்லுநர் போல் கருத்துகளை முன்வைத்து, பாராளுமன்றத்தில் பெரிய ஆளாக காட்ட முயல்கிறார்.

wpengine

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “ஒரு கொலைகாரர்”காட்டிக்கொடுப்பவன்

wpengine