பிரதான செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது!

இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 7 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 333 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 10 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 15 ரூபாவினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலையாக 310 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது,.இதன்படி, மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணம் அதிகரிப்பு!

Editor

வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கான ஆய்வுகூடத் தொகுதி கைதடியில் திறந்து வைப்பு.

wpengine

சமூக கடப்பாடுகளின் சமகால நிலைப்பாடுகள்

wpengine